tamilnadu

மதுரை மற்றும் நாகர்கோவில் முக்கிய செய்திகள்

தூத்துக்குடி- மதுரை விமான நிலையம் வரை  ரூ.134.2 கோடி செலவில் நான்குவழிச் சாலை

நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத் துறை தகவல்

மதுரை, மார்ச் 6- மதுரை  பன்னாட்டு விமான நிலையத்திற்குள் பயணிகள் சென்று வர கூடுதலாக அகல பாதைகள் ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் திருக்குமரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,”மதுரை விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக உள்ளதால், இங்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இவர்களை வரவேற்பதற்காகவும் அழைத்துச் செல்வதற்காகவும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த விமான நிலையத்தை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். விமான நிலையத்திற்குள் செல்லவும் உள்ளிருந்து வெளியே வரவும் இரண்டு பாதைகள் மட்டுமே உள்ளன.  இதனால் நெருக்கடி ஏற்படுவதுடன், விமானத்தைப் பிடிக்கச் செல்பவர்களும், அழைத்து வரச் செல்பவர்களும் அவதிப்படுகின்றனர்.  இங்கு வரும் முக்கியப்பிரமுகர்கள், அரசியல்வாதிகளுடன் ஏராளமானோர் கார்களில் வருகின்றனர். இவர்கள் முறையற்ற வழியில் விமான நிலையத்தின் வெளியே ஏராளமான கார்களை நிறுத்திச் செல்கின்றனர்.  விமான நிலையம் மட்டுமல்லாது பெருங்குடி விலக்கிலிருந்து விமான நிலையத்திற்குள் செல்லும் பாதையை நான்குவழி சாலையாக மாற்றி சீர்படுத்துவதுடன், கூடுதல் அகலப்பாதைகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும். விமானநிலையத்திற்கு முக்கியப்பிரமுகர்கள், அரசியல்வாதிகளுடன் வந்து செல்லும் வாகனங்களை நெறிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த மனு வெள்ளியன்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்,” மனுதாரர் விமான நிலையத்திற்கு மட்டுமே கோரிக்கை வைத்துள்ளார். ஆனால்  தூத்துக்குடி- மதுரை விமான நிலையம் வரை நான்குவழிச் சாலை அமைப்பதற்காக 134.2 கோடி செலவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐந்தாண்டுகளில் இந்தப் பணி முழுமையடைந்துவிடும்” எனத் தெரிவித்தார் . இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

நகர்மயமாதலினால் அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள் 

அழகப்பா பல்கலை. துணைவேந்தர் வேதனை

சிவகங்கை, மார்ச் 6- அழிந்து வரும் கலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தெரிவித்தார்.   காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நுண்க லைத்துறை, திருச்சிராப் பள்ளி கலைக்காவிரி நுண் கலைக்கல்லூரி ஆகியன சார்பில் ‘நிகழ் கலைகள் மற்றும் நுண்கலைகள்: இன்றைய சவால்களும், வாய்ப்புகளும்’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் பன் னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசுகையில் ஒவ் வொரு நாட்டுக்கும் தனித்த கலாசாரமும், பராம்பரியமும் உண்டு. நுண்கலைசார்ந்த கலாசாரத்தையும், பாரம்ப ரியத்தையும் அடையாளம் காண வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் நாட்டுப்புறக் கலைகள் பல உள்ளன. நகா் மயமாதலினால் அழிந்து வரும் கலைகளைப் பாதுகாக் கும் வகையில் அவை பதிவு செய்யப்பட வேண்டும் என்றார். திருச்சிராப்பள்ளி கலைக் காவிரி நுண்கலைக்கல் லூரிச் செயலாளா் எஸ்.ஜி. சாமிநாதன் தொடக்க உரை யாற்றினார்.  அருட்தந்தை எஸ். ஜோசப்ஜெயசீலன் கருத்தரங்கு குறித்து பேசி னார். அழகப்பா பல்கலைக் கழக கலைப்புல முதன்மை யா் கே.ஆா். முருகன், பிரான்ஸ் நாட்டைச்சோ்ந்த எம். அரியநாயகம் ஆகி யோர் பேசினர்.