திருச்சிராப்பள்ளி, பிப்.22- திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் உள்ள மலைக்கோவில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இக்கோவில் எந்த விதமான பராமரிப்பு பணிகளும் மேற்கொ ள்ளப்படாமல் சிதிலமடைந்து அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும் இங்கு வரக்கூடிய பொதும க்களுக்கு எவ்விதமான அடிப்படை வசதி களும் கிடையாது. இதனை கண்டித்தும் மலை க்கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். சிறுவர், சிறுமிகளுக்கான பூங்காக்கள் அமை த்து தர வேண்டும். வாகனம், காலணிகள் பாதுகாப்பு இடம் அமைத்துக் கொடுக்க வேண்டும். தெப்பக்குள சுற்றுச்சுவரை சரி செய்து குளத்தில் கழிவுநீர் கலக்காமல் பராம ரித்து, படகு இல்லம் உள்பட நவீன வசதிக ளுடன் வண்ண விளக்குகளை ஏற்படுத்தி சுற்றுலா தலமாக மாற்றி அமைத்திட வலியு றுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. கையெழுத்து இயக்கத்திற்கு மாநகர் மாவ ட்டச் செயலாளர் பா.லெனின் தலைமையில் வாலிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.