tamilnadu

பழங்குடி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி போராட்டம்

அரியலூர், மே 27- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடி இருளர் மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திஅகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் இருளர் சங்கம் சார்பில் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரைபாம்புகளுடன் காத்திருக்கும் போராட்டம் வரும் 30-ம் தேதிஅகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் உத்திராபதி தலைமையில் நடைபெற உள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் இளங்கோவன் துவக்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநில பொது செயலாளர்சரவணன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலதுணைத்தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாவட்ட செயலாளர் வடிவேல், தமிழ்நாடு விவசாய சங்கமாவட்ட செயலாளர் மகாராஜன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், ராதாகிருஷ்ணன், பரமசிவம் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மலைவாழ் பழங்குடியின மக்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

;