tamilnadu

img

பள்ளி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த கரிசவயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், இந்திய அஞ்சல் துறை நடத்தும் கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்றனர்.  இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி தேசத்தந்தை காந்தி அடிகள் குறித்து, “அன்புள்ள பாபுஜி நீங்கள் அழியாதவர்” என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டி யில் 33  மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நவம்பர் 25 அன்று பள்ளியில் போட்டி நடத்தப்பட்டு, தேசிய அளவில் அஞ்சல் துறை குறிப்பிட்ட முகவரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.  ஆசிரியர்கள் கண்காணிப்பில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் வி.பன்னீர்செல்வம், ஆசிரியை அபூர்வம் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் அஞ்சல் செலவுகளை கரிசவயல் உதவும் கரங்கள் அமைப்பு ஏற்றுக் கொண்டு, பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கியது.

;