tamilnadu

img

மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து ஆக.2-ல் போராட்டம்

திருச்சிராப்பள்ளி:
சிஐடியு மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் திங்களன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை வகித்தார். வேலை அறிக்கையை மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன் வாசித்தார். தீர்மானங்களை முன்மொழிந்து உதவி பொதுச் செயலாளர்கள் வி.குமார், க.திருச்செல்வன் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் மோடி அரசு தொழிலாளர் விரோத சட்டங்களை இயற்றுவதை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய கண்டன போராட்டத்தை தமிழகத்தில் வெற்றி பெற செய்வது; தமிழக அரசிற்கு சொந்தமான 3 தேயிலை தொழிற்சாலைகளை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும்; சாலை பாதுகாப்பு சட்ட மசோதாவில் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள புதிய கட்டணம் மற்றும் அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்டபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

;