tamilnadu

கும்பகோணம் மற்றும் சீர்காழி முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கம்: சிஏஏ எதிர்ப்பு போராட்டம்  ஒத்திவைப்பு

கும்பகோணம், மார்ச் 20- கொரோனா வைரஸ் நோய் எதி ரொலியாக மக்கள் நலன் கருதி தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, பாபநாசம், சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற குடி யுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதி ரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறி விக்கப்பட்டுள்ளது.  பிப்ரவரி  20 ஆம் தேதி முதல் வியாழனன்று வரை 28 நாட்களாக  பல்வேறு  இடையூறுகளுக்கு மத்தி யில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. கொரோனா நோய்த் தொற்று இந்தி யாவையும் தாக்க தொடங்கி யுள்ளது. இந்த நிலையில் குடியு ரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தினை தற்காலி கமாக ஒத்திவைப்பதென தீர்மானிக் கப்பட்டுள்ளது. 

கொரோனா பீதியால்  தொழிலாளர்கள் வேலை இழப்பு: நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்  

தஞ்சாவூர், மார்ச் 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றியக்குழு கூட்டம் திருக்காட்டுப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பி னர் சி. சிவசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார், ஒன்றி யச் செயலாளர் கே.காந்தி ஆகி யோர் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி. முருகேசன், ஆர். உதயகுமார், டி.ஸ்ரீதர், எம்.சம்சுதீன், பி.கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், “கொரோனா அச்சம் காரணமாகத் தஞ்சாவூர் பெரிய கோவிலை மூடியுள்ளது போல், கல்லணைக்கு வரும் சுற்று லா பயணிகள் வருகையை, மார்ச் 31 வரை  தடை செய்ய வேண்டும். கொ ரோனா பீதி காரணமாக வேலை இழந்தவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.  தோகூர் முதல் வேங்கூர் வரை சாலையை முழுமையாகச் சீர மைத்துத் தர வேண்டும். கல்லணை கொள்ளிடம் ஆற்றில் புதிதாகக் கட்டிக் கொண்டு உள்ள பாலத்தைத் தங்குதடையின்றி வேலையை முடித்து, மக்கள் பயன்படும் வகை யில் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். கிராமப் புறங்களில் வீடு வீடாகச் சென்று கொ ரோனோ பரிசோதனை மேற் கொள்ள வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. 

சிறுபான்மையினர்  கல்வி  உதவித்தொகை விபரத்தை மின்னஞ்சல் மூலம் பெறலாம்

திருச்சிராப்பள்ளி,மார்ச் 20 சிறுபான்மையினர் கல்வி உத வித்தொகை தொடர்பான கோ ரிக்கைகள் மற்றும் சந்தேகங்க ளுக்கு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், கல்வி நிலையங்கள் சென்னை சிறுபான்மையினர் நல இயக்கத்திற்கோ அல்லது திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவ லகத்திற்கோ நேரடியாக வருவதை முற்றிலும் தவிர்க்குமாறும் இது குறித்த விவரங்களை nspnodal.mwtn@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் பெற்றுக்கொள்ள லாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். 

அரியலூர் அருகே பறவைகள் சரணாலயம் மூடல்

அரியலூர்,மார்ச் 20- அரியலூர் அருகில் கீழகாவட் டாங்குறிச்சி பகுதியில் பறவைகள் சரணாலயம் கரைவெட்டி பறவை கள் சரணாலயம் உள்ளது. தற்போது இலங்கை, மலேசியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக் கான பல்வேறு வகையான பறவை கள் வந்துள்ளன. இந்நிலையில் கொ ரோனா வைரஸ் பரவுவதால் அரசின் உத்தரவின்படி கரை வெட்டி பறவை கள் சரணாலயம் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என்று மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் கூறினார்.

கோடையில் குளுமை தரும் சிறுதானிய உற்பத்தியைப் பெருக்க அறிவுறுத்தல்

சீர்காழி, மார்ச் 20- கோடையிலும் குளுமை தரும் சிறுதானிய உற்பத்தியைப் பெருக்க விவசாயிகளுக்கு வேளாண் இயக்கு நர் அறிவுரை வழங்கியுள்ளார்.  நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் குறைந்து வருகின்ற சிறுதானிய உற்பத்தி பரப்பை அதிகப்படுத்திடவும் உற்பத்தி செய்து நல்ல மகசூல் பெறவும் அதனை உணவாக உட்கொள்ளும் போது உடல் வலுவடைவதுடன் உடலுக்குக் குளிர்ச்சியும் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. எனவே சிறுதானிய உற்பத்தி யை ஊக்குவிக்கும் விதமாகக் கொள்ளிடம் அருகே உள்ள தாண்ட வன்குளம் கிராமத்தில் கம்பன் உற்பத்தியாளர் மகளிர் குழுவிற்குத் திணை கோ-7, சாமை ஏடிஎல்-1, வரகு கோ-3, குதிரைவாலி கோ-2, கேழ்வரகு கோ-15 ஆகிய ரகச் சிறுதானிய விதைகள் வழங்கப்பட் டுள்ளன. தாண்டவன்குளம் கிராமம் சிறுதானிய உற்பத்திக்குச் சிறந்த வளமான நிலமாக இருப்பதால் அப்பகுதிக்குச் சிறுதானிய விதை கள் இலவசமாக வழங்கப்பட்டுள் ளன. இதனை மற்ற விவசாயிகளும் பின்பற்றிப் பாரம்பரிய உணவான சிறுதானியத்தை வாங்கிப் பயன் பெற வேண்டும் என்று கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் சுப்பை யன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் எதிரொலி   ரயில்வே ஊழியர்களுக்கு முகக் கவசம் வழங்கக் கோரிக்கை

மன்னார்குடி, மார்ச் 20- ரயில்வே பயணச்சீட்டு பரிசோத கர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், கார்டு கள் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்க ளுக்கு முகக் கவசம் கிடைக்காமல் ஆபத்தான முறையில் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வே அமைச்சகம் உடனடியாகத் தலையிட்டுப் பாது காப்பான முறையில் ரயில்வே ஊழியர் கள் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தட்சிண ரயில்வே எம்பி ளாய்ஸ் யூனியன் (டிஆர்இயு) அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுபற்றி இச்சங்கத்தின் உதவி பொ துச் செயலாளர் டி மனோகரன் அனுப்பி யுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள தாவது: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் ரயில்வே நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைக ளை எடுத்து வருகின்றன. முன்பதிவு பயணங்களுக்கு ரத்து கட்டணம் இல்லாமல் முழுக் கட்டணத் தொகையைத் திருப்பித் தந்து வரு கிறது. போதுமான பயணிகள் இல்லாத தொலைதூர ரயில்களை ரத்து செய்து விட்டது. தொடர்ந்து பல ரயில்களை ரத்து செய்தும் வருகிறது. முன்னெச்சரிக்கை யாகக் குளிர்சாதன வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்குக் கம்பளி தலையணை வழங்கவில்லை. ரயில் நிலையங்களில் வழியனுப்ப வருப வர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நடைமேடை கட்டணத்தை உயர்த்தி உள்ளது. தேவை இல்லாத ரயில்வே பய ணங்களைக் கட்டுப்படுத்தப் பல்வேறு பயணக் கட்டணச் சலுகைகளை ரத்து செய்தும் இருக்கிறது. ஆண்டிற்கு ஆறுகோடி மூத்த குடிமக்கள் சலுகை பெறுகிறார்கள். வயதானவர்களைக் கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என்பதால் இவர்களின் தேவையற்ற பயணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மூத்த குடிமக்கள் பயணக் கட்டணச் சலு கைகளை ரத்து செய்தும் உள்ளது. ஆனால் ரயில்வே ஊழியர்கள் விஷ யத்தில் ரயில்வே நிர்வாகம் அக்கறை காட்டவில்லை. பல்லாயிரக்கணக்கில் ஊழியர்கள் ஒரே இடத்தில் பணி புரியும் நிலையில் ரயில்வே தொழிற்சாலைகள் பணிமனைக்கு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. தொழிற்சாலைகளில் ஒரு ஊழியர் கையாளும் உபகரணங்களைப் பல ஊழியர்கள் கையாண்டு வருகின்றார் கள். இடைவெளி விட்டுப் பணியாற்று வது சாத்தியமில்லை லோகோ பைலட்டு கள், கார்டுகள் வருகை பதிவிற்கான பயோ மெட்ரிக் முறை தொடர்கிறது இத னால் கைரேகை பதிய ஒரே இயந்தி ரத்தைத் தான் ஊழியர்கள் அனைவரும் முக்கிய ரயில் நிலையங்களில் பயன் படுத்தி வருகிறார்கள். இதை நிறுத்த எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப் படவில்லை. பொதுமக்களோடு தொடர்புள்ள பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்க ளுக்கு உடனே முகக் கவசம் வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்கப் படவில்லை. பயணச்சீட்டு பரிசோத கர்கள் நிலைய அதிகாரிகள் கார்டுகள் முகக் கவசம் கிடைக்காமல் ஆபத்தான நிலையில் பணியாற்றி வருகிறார்கள். எனவே ரயில்வே அமைச்சர் இவ்விஷ யத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். இவ்வாறு டி மனோகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.