tamilnadu

img

மீனவர்களுக்கு தடைக்கால இழப்பை ஈடு செய்யும் கோலா மீனும் ஏமாற்றியது

தரங்கம்பாடி, மே 9-தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டையில் கோலாமீன் வரத்து மிகக் குறைவாக உள்ளதால் தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென என மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டை, குட்டியாண்டூர் பகுதிகளில் ஆண்டுதோறும் மே மாத தொடக்கத்தில் கோலா மீன் அதிகளவில் வலைகளில் சிக்கும். ஏப்-15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடி தடைக்காலம்என்பதால் நாட்டுப்படகு முலம் முதல் நாள் இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்று மறுநாள் மாலை கரை திரும்புவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக கோலா மீன் வரத்து மிக குறைந்துள்ளதால் மீனவர்கள் கவலையில் உள்ளனர். தடைக் காலத்தில் தங்களுக்கு உதவியாக இருந்த கோலாமீன் வரத்து குறைவாக உள்ளதால் நிவாரண உதவியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;