மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு உறுப்பினரும், கரூர் கட்டுமான சங்க மாவட்ட தலைவருமான கவிஞர் கவிரெளத்திரன் என்கின்ற காதர்பாட்ஷா-தில்ஷாத் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழா 16.5.2019 அன்று காகிதபுரத்தில் உள்ள டிஎன்பிஎல் காகித ஆலை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஸ்ரீதர், மூத்த தோழர் ஜி.ரத்தினவேலு, கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, கரூர் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி, மாநிலக்குழு முன்னாள் உறுப்பினர் துரைராஜ், சிஐடியு சங்க மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, ஈரோடு மாவட்ட சிஐடியு தலைவர் சுப்பிரமணியன், சிஐடியு கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் , மாவட்ட செயலாளர் முருகேசன், கட்சி கரூர் ஒன்றிய செயலாளர் கே.சண்முகம் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்கள் யாசர்அராஃபத் - ரிஸ்வானாரோஷன் ஆகியோரை வாழ்த்தினர். மணமக்கள் சார்பாக கட்சி கரூர் ஒன்றியக் குழு நிதியாக ரூபாய் 10 ஆயிரத்தை வழங்கினர்.