திருச்சிராப்பள்ளி, ஜூன் 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவெறும்பூர் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு கட்சி உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மற்றும் பேரவை கூட்டம் ஞாயிறு அன்று நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய கமிட்டி உறுப்பினர் குருநாதன் தலைமை வகித்தார். திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் நடராஜன் துவக்கவுரையாற்றினார். கட்சி வரலாறு என்ற தலைப்பில் கல்விக்குழு அன்வர்உசேன், இன்றைய அரசியல் என்ற தலைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜ் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் கிளை செயலாளர்கள், கிளை உறுப்பினர்களுக்கு உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது. ஒன்றிய கமிட்டி உறுப்பினர் பெரியசாமி நன்றி கூறினார்.