தோழர் கே.முத்தையா நினைவு தினம்
மன்னார்குடி, ஜூன் 10- மார்க்சீய அறிஞரும், தமிழக கம்யூனிஸ இயக்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரும், ஜனசக்தி தீக்கதிர் செம்மலர் இதழ்களின் ஆசிரியரும், தமுஎகச ஸ்தாபக தலைவருமான தோழர் கே.முத்தையா 16-வது நினைவு தினம் கட்சியின் மன்னார்குடி நகரக்குழு சார்பில் கடைபிடிக்கப்பட்டது. நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். தோழர் கே.எம்.உருவப் படத்திற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இரா.தாமோதரன் மாலை அணிவித்து அவரது நினைவுகளைப் போற்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில் நகரக்குழு உறுப்பினர்கள், கட்சிக்கிளை செயலாளர்கள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பேராவூரணி, பொன்னமராவதியில் மின்தடை
தஞ்சாவூர், ஜூன்.10- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுவதால் காலகம், ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, குருவிக்கரம்பை, நாடியம், சேதுபாவாசத்திரம், பூக்கொல்லை, ரெட்டவயல், மணக்காடு, பட்டத்தூரணி, படப்பனார்வயல், சாணாகரை, ஆவணம், திருச்சிற்றம்பலம், கொல்லைக்காடு, குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதே போல் பொன்னமராவதி ஒன்றியம் கொன்னையூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு நடைபெறுவதால் புதன்கிழமை காலை 9 முதல் மாலை 6 மணி வரை பொன்னமராவதி, வலையபட்டி, கொப்பனாப்பட்டி, செம்பூதி, கொன்னைப்பட்டி, சுந்தரம், கோவணூர், செவலூர், வேகுப்பட்டி, குழிபிறை, ஏனாதி, பிடாரம்பட்டி, வேந்தன்பட்டி, தொட்டியம்பட்டி, ஆலவயல், கண்டியாநத்தம், கல்லம்பட்டி, நகரப்பட்டி, அம்மன்குறிச்சி, காரையூர் மேலைத்தானியம், தூத்தூர், மைலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.