tamilnadu

img

குதிரை வண்டிப் பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

புதுக்கோட்டை, நவ.10- குதிரை வண்டி பந்தயம் மற்றும் சைக்கிள் பந்தயம் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றது. பந்தயத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பெரிய குதிரை வண்டி பிரிவில் கோவை ஆண்டவர் குதிரை வண்டி முதல் பரிசையும், மச்சுவாடி டெல்லி பிச்சையா குதிரை வண்டி 2-வது பரிசை யும், சந்தைப்பேட்டை மதன் குரூப்ஸ் குதிரை வண்டி 3-வது பரிசையும் பெற்றன.  நடுகுதிரை வண்டி பிரிவில் அன்னூர் மூர்த்தி குரூப்ஸ் குதிரை வண்டி, காளியம்மன் மதுராயன் சார்ஜன் குதிரை வண்டி, மச்சுவாடி டெல்லி பிச்சையா குதிரை வண்டிகள் பரிசு களைப் பெற்றன. சிறிய குதிரை வண்டி பிரிவில் திருச்சி உறையூர் விஜயா குதிரை வண்டி, திருச்சி மணிகண்டம் பாத்திமா ஆசிக் குதிரை வண்டி, சந்தைப்பேட்டை மதன் குரூப்ஸ் பரிசுகளைப் பெற்றன. புதுக்குதிரை வண்டி பிரிவில் திருச்சி மணிகண்டம் பாத்திமா ஆசிக் குதிரை வண்டி, திருச்சி லால்குடி மண்சுறா குதிரை வண்டி, புதுக்கோட்டை மீண்டும் செந்தில்பாலா குதிரை வண்டிகள் வெற்றி பெற்றன. இதேபோல சைக்கிள் பந்தயத்தில் திருச்சி சிவா முதலிடத்தையும், திருச்சி குண சேகர் இரண்டாமிடத்தையும், புதுக்கோட்டை ஜாபல்அலி மூன்றாமிடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற குதிரை வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சைக்கிள் பந்தய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.