மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் செயல்பட்டு வரும் அரசு விதைப்பண்ணையில் புதிதாக அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருக்கிறது. உடனடியாக கட்டிடத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.