tamilnadu

img

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.83 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவர் மிக்ஸியில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ 1.83 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானம் ஒன்றில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனால் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு பயணியிடம் மேற்கொண்ட சோதனையில் 2 கிலோ 579 கிராம் எடையிலான தங்கத்தை  பிளேட் வடிவில் மிக்ஸியில் பதுக்கி வைத்துக் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பயணியைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.