கரூர், ஜூலை 10- கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் மாணவர்களின் ஆளுமைத் திறனை வளர்ப்பதற்காக ஆண்டு முழுவதும் குழந்தைகள் திருவிழா, அறிவியல் திருவிழா, திறமைத் திருவிழா, கலைத் திருவிழா, நுண்ணறிவுத் திருவிழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கே.ஜி. வகுப்பு குழந்தைகள் ‘பழங்கள் தின விழா’ கொண்டாடினர். கே.ஜி மாணவர்கள் பழங்களின் வண்ணங்களில் உடையணிந்து கதைகள் கூறி, நடனம் ஆடி மகிழ்ந்தனர். பழங்களில் உள்ள சத்துக்கள் குறித்தும், பழங்களை உண்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெரிந்து கொண்டனர். பின்னர் குழந்தைகளுக்கு பழங்களின் கலவை (புரூட் சாலட்) வழங்கப்பட்டது. பழங்கள் போல உடையணிந்து வந்த மழலையர்களை பள்ளியின் தாளாளர் எஸ்.மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன், நிர்வாக அலுவலர் எம்.சுரேஷ், முதல்வர் எஸ்.சுதாதேவி மற்றும் ஆசிரியர்கள் - மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.