tamilnadu

img

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்: 6 மாவட்டங்களில்  தடை

திருச்சி:
திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் காவல்நிலையத்தில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவழக்கில் சிபிசிஐடி போலீசார் 5 பேரைகைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கு உடந்தையாக இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் போலீசையும் கைது செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. 

இந்தநிலையில், திருச்சி,  கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸாரை பயன்படுத்துவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரையில் இந்த 6 மாவட்டங்களிலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இயங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா தெரிவித்துள்ளார்.

;