tamilnadu

img

அதிராம்பட்டினத்தில் தீ விபத்து: குடிசைகள் நாசம்

தஞ்சாவூர், ஜூன் 26- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நடுத்தெரு மேல்புறத்தை சேர்ந்தவர் அபூபக்கர். இவரது வீட்டின் அருகே சாகுல் ஹமீது மனைவி ரஹ்மத் (38), ரஹ்மான் மனைவி அபு ரோஸ் பேகம் (20) ஆகியோர் அடுத்தடுத்து குடிசை வீடுகளில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் திடீரென குடிசையின் மேற்கூரையில் தீப்பற்றியது, பின்னர், தீ மளமள வென பரவியதால் வீட்டில் இருந்த அரிசி மூடை, பீரோ, எரிவாயு சிலிண்டர், வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட அனைத்தும் தீயில் கருகின.  இதனால், அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர், அப்பகுதியினர் திரண்டு வந்து தீயை போராடி அணைத்தனர். இதனால், அரு கில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. பின்னர், பட்டுக்கோட்டை தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.