tamilnadu

img

படத்திறப்பு நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி ஜூலை 13-  திருத்துறைப்பூண்டி ஒன்றியம், வரம்பியம் கிளை முன்னாள் கிளை செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மாமனாருமான தோழர் இ.ராஜகோபால் படத்திற்ப்பு நிகழ்ச்சி சனியன்று வரம்பியம் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், வடக்கு ஒன்றிய செயலாளர் பி.இராமச்சந்திரன், நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன் முன்னிலை வகித்தனர்.  தோழர் இ.ராஜகோபால் உருவப் படத்தினை திறந்து வைத்து மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து புகழஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் நாகை மாவட்ட செயலாளர்  நாகை மாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிவேல், பி.கந்தசாமி, வி.எஸ்.கலியபெருமாள், நா.பாலசுப்பிரமணியன், சேகர், கே.என்.முருகானந்தம், ஆர்.குமாரராஜா, எம்.கலைமணி, கே.தமிழ்மணி, சி.ஜோதிபாசு, சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் டி.முருகையன் மற்றும் வி.ச கட்சி மாவட்ட செயலாளர் வி.த.செல்வம், சி.பி.ஐ ஒன்றிய செயலாளர் அ.பாஸ்கர், மாவட்ட துணை செயலாளர் ஆர்.ஞானமோகன், தி.மு.க ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள், தோழர்கள் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர். 

;