tamilnadu

img

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் பொதுத்துறை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 8- சிஐடியு திருச்சி புறநகர் மாவட் டக்குழு சார்பில் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை தயாரிப்புக் கூட்டம் ஞாயிறு அன்று பெல் சிஐடியு சங்க அலுவல கத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில பொது செயலாளர் சுகு மாறன் துவக்க உரையாற்றினார் அறிக்கையை சமர்ப்பித்து மாநில துணைத்தலைவர் விஜயன் பேசி னர்.  கூட்டத்தில் அனைத்து ஒப் பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பிபிசி நிறுவனத்தை விற்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். பிஎஸ் என்எல் நிறுவனத்தில் பணியாற் றிய ஒப்பந்த தொழிலாளர் களுக்கு சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் உள்பட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மத்திய பொதுத்துறை ஒப்பந்த தொழிலாளர்கள் ஏப் ரல் மாதத்தில் சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் நடத்து வது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகி கள் செல்வராஜ், விநாயகமூர்த்தி உள்பட பெல், ஐஓசி, பிபிசி, கூடங் குளம் அணுமின் நிலையம், கல் பாக்கம் அனல்மின் நிலையம், சேலம் ஸ்டீல் பிளான்ட், நெய் வேலி, காமராஜர் துறைமுகம் ஆகியவற்றை சேர்ந்த சிஐடியு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சிஐ டியு திருச்சி புறநகர் மாவட்ட பொருளாளர் சம்பத் வரவேற் றார். ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

;