tamilnadu

ரூ.3 லட்சம் பறிமுதல்

தஞ்சாவூர், ஏப்.1-

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே செருவாவிடுதி பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர் திங்கள்கிழமை வாகனச் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் உரிய ஆவணம் இன்றி இருந்த ரூ 3 லட்சத்தை பறிமுதல் செய்து பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 


;