சீர்காழி, ஜூன் 19- சீர்காழி அருகே பாசன பொறை வாய்க் காலில் 4 கிமீ தூரத்துக்கு உப்பு நீர் புகுந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் பொறை வாய்க்காலின் கடைமடைப் பகுதியில் சுமார் 60 ஆண்டு பழமை வாய்ந்த கதவணை இருந்தது. இந்தக் கதவணையை பராமரிக்காததால் பழுத டைந்தது. இந்நிலையில் கடந்தாண்டு வாய்க் காலில் அதிக நீர் வரத்து இருந்ததால் தண்ணீர் வடிய முடியாத நிலை ஏற்பட்டு வாய்க்கால் கரை யில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பழுதடைந்த கதவணை உடைந்து அகற்றப்பட்டது. மீண்டும் கதவணையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது கோடை காலமாக இருப்பதால் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றி லிருந்து உப்பு நீர் மிகுதியாகி பொறை வாய்க்காலில் 4 கிமீ தூரத்துக்கு புகுந்து விட்டது. இதனால் எடமணல், மேலப்பாளையம், வடகால் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 400 ஏக்கர் விளை நிலங்களில் உப்பு நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கரையோரம் உள்ள ஆயிரக்கணக்கான தேக்கு மரங்கள் கருகும் முன்பு, அவற்றை உப்பு நீர் தாக்கத்தி லிருந்து பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொள்ளி டம் கடைமடை பகுதி விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.