tamilnadu

img

மருந்து- விற்பனை பிரதிநிதிகள் சங்க அலுவலக கட்டட திறப்பு விழா

திருச்சிராப்பள்ளி, செப்,8- தமிழ்நாடு மருந்து மற்றும் விற் பனை பிரதிநிதிகள் சங்கத்தின் திருச்சி கிளையின் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா ஞாயிறு அன்று உறை யூரில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாநிலத்தலைவர் சத்தியநாராயணன் தலைமை வகித்து சங்க கொடியை ஏற்றி வைத்தார். புதிய அலுவலக கட்டிடத்தை சிஐடியு மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன் திறந்து வைத்தார். கட்டிட கல்வெட்டை தமிழ் நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதி நிதிகள் சங்க அகில இந்திய துணைத் தலைவர் சுரேந்திரன் திறந்து வைத்தார். திருச்சி கிளைத்தலைவர் பாலகுரு, மாநிலக்குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில் சங்க தலைவர் மனோ கரன், பொதுச்செயலாளர் பிரபாகர் தேவதாஸ் துவக்கவுரை ஆற்றினார். விழாவில் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் கோபி, மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீகாந்த், திருச்சி மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் குணசேக ரன், சிஐடியு மாநகர் மாவட்ட செயலா ளர் ரெங்கராஜன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு மருந்து மற்றும் விற் பனை பிரதிநிதிகள் சங்க துணை பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் வர வேற்றார்.  திருச்சி கிளை செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

;