tamilnadu

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம்

பல்கலை ஆசிரியர் சங்கம் அறிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 5- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக வளர்ச்சி மற்றும் மாணவர் நலனை கருத்தில் கொண்டு 28 துறைகளில் காலியாக உள்ள 54 உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் பணி யிடங்களை நிரப்புவதற்காக 8.7.2019ம் ஆண்டு  அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. சமீபத்திய யு.ஜி.சி வழிகாட்டுதல்களின்படி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், கடந்த ஆண்டு  காலியாக உள்ள ஆசிரியர் பதவிகளை நிரப்புவதற்கான ஒரு நடைமுறையை அமைத்தது. இதன் மூலம் பல்கலைக்கழகம் ஒரு அலகு. என்று கருதப்பட்டு மேலும் 200-புள்ளி ரோஸ்டர் அடிப்படையிலும் பின்பற்றப்பட்டது. யு.ஜி.சியின் வழிகாட்டுதல்கள் மாநில பல்க லைக்கழகங்களுக்கு பொருந்தாது என்று உயர்கல்வித் துறை பின்னர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. எவ்வாறாயினும், அதாவது பல்க லைக்கழகம் ஆட்சேர்ப்பு பணி அறிவிப்பை தொடர்ந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு அதற்கான ஆய்வு செயல்முறை நடைபெற்று நேர்காணல் தேதியை எதிர் நோக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் உயர்கல்வித் துறை செப்டம்பர் மாதம் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டது.  இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அரசின் எந்தவித விதிமுறைகளையும் மீறியதாக கருதப்படவில்லை. இருப்பினும் பல்கலைக் கழக உயர்மட்ட ஆட்சிக்குழு கூட்டத்தில் இதன் கோரிக்கையை எடுத்து செல்கையில் பல்கலைக் கழகத்தை ஒரு அலகு என எடுத்துக்கொண்டு ஆட்சேர்ப்பு அறிவிப்பை தொடரலாம் என பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டத்தில் அப்போதைய உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா  ஒப்புதல் தெரிவித்து பின்னர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டத்தில் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒருசிலர் பல்கலைக்கழக வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மாநில அரசு விதிமுறைகளை மீறியுள்ளது என்ற தவறான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

உயர்கல்வித்துறை ஒப்புதல்

சில மாதங்களுக்கு முன்பு தான், உயர்கல்வித் துறை ஆசிரியர் பதவி நியமனங்களுக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக (பல்கலைக்கழகத்தை ஒரு அலகு என) ஏற்றுக்கொள்வதில் பல்கலைக் கழகத்திடமிருந்து ஓர் அறிக்கையை கேட்டுக் கொண்டது. அதன்படி இப்போது பணியாளர் கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (பி மற்றும் ஏ.ஆர்) துறையிலிருந்து அனுமதி பெற்றபின் பல்கலைக்கழகத்தை ஒரு அலகு எனஎடுத்துக் கொள்ளலாம் என்று அதற்கான ஒப்புதல் உயர் கல்வித்துறை அளித்துள்ளது. இதுவரை பாரதிதாசன் பல்கலைக்கழகம் மாநில அரசின் பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டும் பல்கலைக்கழக ஆசிரியர் நியமன இடஒதுக்கீடு முறையில் ஒவ்வொரு சூழலிலும் மாநில அரசிடம் ஒப்புதல் பெற்றே நடத்தி வரு கிறது என்றும் தௌ;ளத்தெளிவாக தெரிகிறது. பல்கலைக்கழக வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் ஒரு சிலர் பத்திரிக்கை நாளிதழில், மீடியாக்களில் தவறான கருத்துக்கள் பரப்பி வருகின்றனர்.

இதன்பொருட்டு பல்கலைக்கழக அங்கீ காரம் பெற்ற  ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சக்தி வேல், செயலாளர் வெற்றிவேல் கூறுகையில்: பாரதிதாசன் பல்கலைக்கழகம், ஆசிரியர் நியமன இடஒதுக்கீடு முறை கடைப்பிடிப்பதில் மாநில சட்ட விதிகளுக்கு உட்பட்டு உயர்  கல்வித்துறை இந்த அரசாணை வழங்கியுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் இன்னும் முழுமையாக 7 மாதங்கள் பணி காலம் உள்ள நிலையில் அவர் எந்த தடங்க ளும் இன்றி இந்த நேர்காணல் நடத்தப்படலாம் என்றும் கூறினர். அதுமட்டுமல்லாது புதிதாக  எந்த ஒரு அறிவிப்பும் வழங்க முடியாவிட்டாலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அறிக்கை என்பதால் இதை தொடர்ந்து நடத்துவதில் எவ்வித சிக்கலும் இல்லை என்று கூறினர். மேலும் காலியாக உள்ள ஆசிரியர் பதவி களை நிரப்புவதன் மூலம் என்ஏஏசி, எப்ஐஎஸ்டி என்பது போன்ற தேசிய மற்றும் உலக தரவரிசை யில் பல்கலைக்கழகத்தை முன்னேற்றப்பாதை யில் கொண்டு செல்வதற்கும் இது வழி வகுக்கும் என்பதால் துணைவேந்தர், மாநில அரசின் ஒப்புதல் அளித்ததன் பேரில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரே ஆசிரியர் சங்கமான பியுபிஏ( பாரதி தாசன் யுனிவர்சிட்டி புரபசர்ஸ் அசோசியேசன்) அனைத்து ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஆசிரியர் நியமன பதவிக ளுக்கான நேர்காணலை உடனடியாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறது என்றும் கூறினர். பாரதிதாசன் பல்கலைக்கழக வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் ஒருசிலர் ஏதேனும் தவறான கருத்துக்களை பரப்பி வருவதை யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று  கேட்டுக் கொண்டுள்ளனர்.