tamilnadu

ஓட்டு போடச் சென்ற திமுக பிரமுகர் வெட்டிக்கொலை!

மதுரை, ஏப்.18-மதுரையில் ஓட்டுபோடச் சென்ற திமுகபிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டல தலைவராக இருந்தவர் திமுக பிரமுகர் வி.கே குருசாமி. இவரது மருமகன்எம்.எஸ்.பாண்டியன். வியாழனன்று நடைபெறும் மக்களவைத் தேர்தலையொட்டி மதுரை சிந்தாமணி பகுதியில் அமைக் கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு பாண்டியன்வாக்களிக்க சென்றுள்ளார். அப்போது அங்குவந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நடுரோட்டில் வைத்து பயங்கர ஆயுதங்களால் பாண்டியனை தாக்கியுள்ளனர். உயிருக்குப் பயந்து அங்கிருந்து தப்பியோடி, வீட்டுக்குள் நுழைந்த பாண்டியனை மர்ம கும்பல் விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியுள்ளது.அதன்பிறகு அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த பாண்டியனை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயேபாண்டியன் இறந்துவிட்டார். இதையடுத்து பிரேதப் பரிசோதனை செய்வதற்காக அவரதுஉடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முன்விரோதம் காரணமாக பாண்டியன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறுஏதேனும் காரணமா என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பாண்டியன் கொலை செய்யப்பட்ட இடத்தில் தடயவியல் அதிகாரிகளும் சோதனை செய்துள்ளனர். மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டல தலைவரும், அதிமுகவைச் சேர்ந்தவருமான ராஜபாண்டியன் தரப்பினரே இவரை மதுரை கீழவெளி பகுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்ததாகப் பாண்டியன் தரப்பினர் காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளனர்.

;