tamilnadu

img

உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 10- அரசு ஊழியர்கள் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கும் விதமாக, சரண்விடுப்பு ரத்து, அகவிலைப்படி முடக்கம் உள்ளிட்டவை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி   மாவட்ட மையத்தின் சார்பில் 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     திருச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை சங்க மாவட்ட தலைவர் ஜாஹீர்உசேன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜ், செயலாளர் பழனிச்சாமி, அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவரம்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பழனியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏர்போர்ட் பகுதியில் உள்ள சுகாதார போக்குவரத்து பணிமனையில் 2-வது வட்டக் கிளை தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டோல்கேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மன்னார்புரம் பல்துறை வளாக கட்டடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட துணைத்தலைவர் சத்தியவாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணப்பாறை மருத்துவ துறை அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர்: இதே போல் அரசு ஊழியர் சங்க தஞ்சாவூர் வடக்கு வட்டம் சார்பில் தஞ்சையில் பனகல் கட்டடம், கூட்டுறவுத் துறை, வணிகவரித் துறை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். செயலாளர் இளங்கோ விளக்கவுரையாற்றினார்.  முன்னாள் மாநிலச் செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டத் தலைவர் கோதண்டபாணி, வட்ட துணைத் தலைவர்கள் சதீஷ், மதி, அரசு தொழிற் பயற்சி அலுவலர் சங்க செயலாளர் அஜய் ராஜே, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.