tamilnadu

ரயில்வே தனியார்மயத்தை கண்டித்து ஜூலை 16 சிஐடியு, டிஆர்இயு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 12- சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட நிர்வா கிகள் கூட்டம் சமூக வளைதளம் மூலம் ஞாயி றன்று நடைபெற்றது. சிஐடியு மாநகர் மாவட்ட  செயலாளர் ரெங்கராஜன், டிஆர்இயு நிர்வா கிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ரயில்வே தனியார்மயத்தை கண்டித்து சிஐடியு மற்றும் டிஆர்இயு சார்பில்  ஜூலை 16 (வியாழக்கிழமை) அன்று காலை  திருச்சி ரயில்வே ஜங்ஷனிலும், மாலை ஸ்ரீரங்கம், திருவெறும்பூரிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்குவது, ஆகஸ்ட் 9  அன்று விவ சாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து 100 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது,  ஜூலை 23 அன்று  10,000 துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்வது.  திருச்சி மாநகராட்சியில் 3000-த்திற்கு மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட தரை கடை வியாபாரிகள் உள்ளனர். இவர்களுக்கு அரசு அறிவித்த ரூ.10,000 வங்கிக் கடனை எந்தவித  நிபந்தனையும் விதிக்காமல், எளிய முறை யில் கடன்தொகையை வங்கி கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். மாநகராட்சியில் பதிவு செய்துள்ள அனைத்து வியாபாரிக ளுக்கும் கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.