tamilnadu

img

மக்கள் ஒற்றுமை மேடை ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.19- சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் செவ்வா யன்று சமயபுரம் 4 ரோடு பகுதி யில் பெருந்திரள் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மண்ணச்ச நல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். ஆர்ப் பாட்டத்தை விளக்கி தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மாநிலக்குழு உறுப்பி னர் நந்தலாலா, மாவட்ட அமைப்பாளர் சுப்ரமணியன், சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், ஈச்சம்பட்டி சம்சூதீன், கொள் ளிடம் மறை வட்டத் தலைவர் நிர்மல்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ், மதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் டிடிசி சேரன். விசிக மாவட்டச் செயலாளர் நீலவாணன், திமுக ஒன்றியச் செயலாளர் இளங்கோவன், ஐஜேகே மாவட்டச் செயலாளர் செல்வக்குமார் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.