திருச்சிராப்பள்ளி, ஆக,9- எல்.ஐ.சி பங்குகளை பங்குசந்தையில் பட்டியலிடும் முன் மொழிவை கைவிட வேண்டும். இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த கூடாது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய எல்.ஐ.சி முகவர் சங்கம்(லிகாய்) ஸ்ரீரங்கம் கிளை சார்பில் எல்ஐசி ஸ்ரீரங்கம் கிளை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு லிகாய் சங்க தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி உபதலைவர் மூக்கன், செயலாளர் சின்னசாமி, பொருளாளர் கோபிநாத், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க செயலாளர் வெங்கட்ராமன், தலைவர் சாந்தா, பொருளாளர் பெர்ணான்ட்ஸ் ஆகியோர் பேசினர். லோகநாதன், ராம்குமார், மோகன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதே போல் அரியலூர் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு கிளை தலைவர் ராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்ட செயலாளர்பி.துரைசாமி மாவட்ட பொருளாளர் ஆர்.சிற்றம்பலம் முதுநிலைஅதிகாரிகள்சங்கசந்திரகுமார் ராம்ஜிசீனியர் அசோசியேட் மணவாளன் சண்முகம் கண்டன உரை நிகழ்த்தினர் செயலாளர் கே.கிருஷ்ணன் நன்றி கூறினார்.
கும்பகோணம்
அகில இந்திய எல்ஐசி முகவர் சங்கம்(லிக்காய்) சார்பாக கும்பகோணம் எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முகவர் சங்க பொறுப்பாளர் டிமோசாங்கோ தலைமை வகித்தார். சங்க மாநில பொறுப்பாளர் குழந்தைவேல் ஊழியர் சங்க கோட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன் கோட்ட இணை செயலாளர் சேகர் சுரேஷ் புருஷோத்தமன் முகவர் சங்க பொறுப்பாளர்கள் தமிழ்ச்செல்வன் முருகன், ஜெயக்குமார், வளர்ச்சி அதிகாரி நரேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தஞ்சாவூர்
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு லிக்காய் முகவர் சங்க சிஏபி கிளை பொருளாளர் ரமேஷ் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். லிக்காய் கோட்டத் தலைவர் தங்கமணி தொடக்க உரையாற்றினார். எல்ஐசி வளர்ச்சி அதிகாரிகள் சங்க இராதாகிருஷ்ணன், முதல்நிலை அலுவலர் சங்க முருகையன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட துணைத்தலைவர் சரவண பாஸ்கர் ஆகியோர் பேசினர். நிறைவாக அகில இந்திய எல்ஐசி முகவர் சங்க மாநிலச் செயலாளர் ராஜா நிறைவுரையாற்றினர்.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை எல்ஐசி கிளை அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு லிக்காய் சங்கத் தலைவர் ரகுபதி தலைமை வகித்தார். செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். லிக்காய் மாநில செயல் தலைவர் பூவலிங்கம் விளக்கவுரையாற்றினார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட இணைச் செயலாளர் விஜயகுமார், கிளைத் தலைவர் வி.எஸ்.பாலகிருஷ்ணன், முதல் நிலை அலுவலர் சங்கம் அருண்குமார் தாமோதரன், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் ஏ.பி.கோகுல்நாத் உள்ளிட்டோர் பேசினர். கிளைப் பொருளாளர் பஞ்சாட்சரம் நன்றி கூறினார்.