tamilnadu

img

மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி,செப்.14- தொழிலாளர்களின் 44 வகையான சட்டத்தை 4 வகையாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தியதை திரும்பப்பெற வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி சங்க மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட தலைவர் ராமர், மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.