திருச்சிராப்பள்ளி, ஜூலை 9- இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். சுங்க கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக் குள் கொண்டு வரவேண்டும். ஆர்டிஓ அலுவலகத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. சாலைபாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் வாகன போக்குவரத்து தொழிலாளர் சங்க திருச்சி மாவட்டக்குழு சார்பில் செவ் வாய் அன்று ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சங்க மாவட்ட செயலாளர் வீரமுத்து, மாவட்ட தலைவர் சந்திரன், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன் ஆகியோர் பேசினர். சங்க நிர் வாகிகள் வருசை முகமது, நல்லையா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
இதே போல் கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு தமிழ்நாடு மோட்டார் வாகன தொழில் தொழி லாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரத்தலைவர் கே.ரவி தலைமையேற்றார். மாநில துணை தலைவர்கள் ம.கண்ணன் பி. பார்த்தசாரதி மாவட்ட ஆட்டோ ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.ஜெயக்குமார் கௌரவத் தலைவர் கேசெந்தில்குமார் நகர தலைவர் தாடி சாமிநாதன் நகர செயலாளர் கார்த்திகேயன் தஞ்சை மாவட்ட ஆட்டோ தலைவர் எல்.ஜி.மனோ கரன் எல்பிஎப் நகர செயலாளர் அருண், ராஜகோபால், மகாராஜன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். ஆர்ப் பாட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் வாகன மெக்கானிக்குகள் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனையாளர்கள் சிறு வாகன உரிமையாளர்கள் சாலைப் போக்குவரத்து வாகன தொழிலா ளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
அனைத்து போக்குவரத்து தொழி லாளர் சங்கம்(சிஐடியு) சார்பில் செவ்வாய்க்கிழமையன்று புதுக் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஜியா வுதீன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் க.முகமதலி ஜின்னா தொடக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ் நிறைவுரையாற்றினார். ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி நலச்சங்க மாவட்டத் தலைவர் ஆர்.திருப்பதி வாழ்த்திப் பேசினர். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் கே.சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் கணேசன், சாகுல்ஹமீது, ஜகுபர்அலி, பாலசுப்பிரமணியன், சண் முகம் உள்ளிட்டோர் பேசினர்.