திருச்சிராப்பள்ளி, ஜூலை 5- திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியத்தில் வடகரை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி பாலசமுத்திரம், அரசலூர் கார்த்திகைப்பட்டி விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலைமையில் தொட்டியம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாலசமுத்திரம் கார்த்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமநாதன், ராசு, முருகானந்தம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.