tamilnadu

கேன் குடிநீர் விலையை உயர்த்த முடிவு  

திருச்சிராப்பள்ளி: திருச்சி மாவட்ட அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கலிய மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், கடந்த 16 ஆண்டுகளில் மற்ற பொருட்களின் விலை வாசி பல மடங்கு உயர்ந்த நிலையில் குடிநீரின் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தற்போது  ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், இத்தொழிலை பாதுகாக்கவும் தவிர்க்க முடியாத நிலையில் 20 லிட்டர் வாட்டர் கேன் ரூ 40 ஆக விலையேற்றம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக செயலாளர் ஹேம நாதன் வரவேற்றார். பொருளாளர் ராஜா நன்றி கூறினார்.