மன்னார்குடி, ஜூன் 29- திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து ஏமாற்றியதாக கலைவாணன் என்பவர் மீது கிருபா என்ற இளம்பெண் மன்னார்குடி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். நீடாமங்கலம் வட்டம் வாசுதேவ மங்கலம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகள் கிருபாவும் வலங்கைமான் வட்டம் கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த கலைவாணன் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞரும் ஆறு ஆண்டுக்கு மேலாக காதலித்து வந்தனர். கலைவாணன் திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்தார். வேளாங்கண்ணி சென்னை போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் கிருபாவுடனான தொடர்பை திடீரென துண்டித்துக் கொண்டார். கிருபா விசாரித்த போது கொக்கலடி கிராமத்தில் வேறொரு பெண்ணுக்கும் கலைவாணனுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. கிருபாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி நம்ப வைத்து ஆறு ஆண்டுகளாக கலைவாணனால் ஏமாற்றப்பபட்டதை உணர்ந்த கிருபா மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் கலை வாணன் 2012லிருந்து தன்னை நிச்சயம் திரு மணம் செய்து கொள்வ தாக நம்ப வைத்து தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி் விட்டதாகவும் அவரது மைத்துனர் செந்தில் தன்னை கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் கலைவாணன் மற்றும் அவரது உறவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புகாரை பெற்றுக் கொண்ட மகளிர் காவல் நிலையத்தார் கலைவாணன் மீது ஏமாற்றுதல் கற்பழிப்பு குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 417, 376, 294பி, 506 பகுதி 1 இன் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். இவ்ழக்கில் ஏமாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட இளம்பெண் கிருபாவிற்காக நீடாமங்க லம் ஒன்றிய மாதர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழுவும் தலையிட்டு தொடர் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.