tamilnadu

சிபிஎம் சிறப்பு பேரவை

குளித்தலை, ஜூலை 5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டம் குளித்தலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜு தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். குளித்தலை காவிரி ஆற்றில் விவசாயத்தையும், நீர் ஆதாரத்தையும் பாதுகாக்க தடுப்பணை அமைக்க வலியுறுத்தியும், குளித்தலையில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தியும், குளித்தலை உழவர் சந்தை பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வலியுறுத்தியும், குளித்தலை-முசிறி பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வலியுறுத்தியும், மணப்பாறை மெயின்ரோட்டில் உள்ள ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தியும் குளித்தலை காந்தி சிலை முன்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.