tamilnadu

img

சிபிஎம் வளர்ச்சி நிதியளிப்பு கூட்டம்

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றிய பாளக்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாளக்குறிச்சி கிளை செயலாளர் லூகால் தலைமை தாங்கினார். கிளை செயலாளர்கள் நாகராஜ், தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி வளர்ச்சி நிதியாக ரூ 20 ஆயிரத்தை முதல் தவணையாக மருங்காபுரி ஒன்றிய செயலாளர் தியாகராஜன் வழங்க, அதனை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் நிதியை பெற்றுக் கொண்டார். கமிட்டி உறுப்பினர்கள் அழகர்சாமி, அண்ணாதுரை, பழனிசாமி, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.