tamilnadu

நன்னிலம் அருகே சிபிஎம் தேர்தல் நிதியளிப்பு பேரவை

நன்னிலம், ஏப்.1-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு சார்பில் தேர்தல் நிதியளிப்பு சிறப்பு பேரவை கூட்டம் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த எரவாஞ்சேரியில் நடைபெற்றது. பகுதிக்குழு செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரவிசந்திரன், சந்திரகாசன், அப்துல் முத்தலிப், மணிகண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் கலைமணி ஆகியோர் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பேசும்போது, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜை வெற்றிபெற செய்ய கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து இன்றைய மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத செயலை வீடுதோறும் கொண்டு செல்லும் திண்ணை பிரச்சார பணியினை அதிதீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றார். மேலும் எரவாங்சேரி பகுதிக்குழு சார்பில் தேர்தல் நிதியாகரூ.70 ஆயிரம் வழங்கப்பட்டது.

;