tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர்கள் வாக்களித்தனர்

தரங்கம்பாடி, டிச.27- நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் வெள்ளியன்று தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.  மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ராணி இராசையன்,   ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பி.சீனிவாசன், ஜி.கலைச்செல்வி, ஆர்.தம்புசாமி, கே.பி.மார்க்ஸ், சாந்தி, இளையராஜா, ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜி.வெண்ணிலா (திருவிளையாட்டம்), சந்திரமோகன்(கொத்தங்குடி), சுதா ரவிச்சந்திரன் (டி.மணல்மேடு), கல்விக்கரசி பரமசிவம் (திருக்கடையூர்), ஆசிக் ரஹ்மான் (இலுப்பூர்), ராஜேஸ்வரி (எடுத்துக்கட்டி), குமரன் (நரசிங்கநத்தம்), முரளி(மாணிக்கபங்கு)  ஆகியோர் வாக்களித்தனர்.

;