tamilnadu

img

33 பேருக்கு கொரோனா...  திருச்சியில் எஸ்பிஐ வங்கி மூடல்...  

திருச்சி
தமிழக மாவட்டங்களில் கொரோனா பரவல் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நகர் பகுதியில் மட்டும்மல்லாது கிராமப் பகுதிகளிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில் மாநிலத்தின் முக்கிய மாநகர் பகுதியான திருச்சியின் மத்திய பேருந்து நிலைய பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பணியாற்றும் மேலாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளித்த பின்பும் அவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

இதனால் அந்த வங்கி சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும் வங்கிக்கு வந்தவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் அனைவரும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்யுமாறும் வங்கி கிளை நிர்வாகம் அறிவித்துள்ளது.   

;