திருச்சிராப்பள்ளி, ஜூன்,23- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் அந்தநல்லூர் பேரவை கூட்டம் ஞாயிறு அன்று முக்கொம்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தர்மராஜ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஜீவா, மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர் கோபிநாத், பொருளாளர் புஷ்பநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் வினோத், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் லெனின், அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் கோகுல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கி அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புவனேஸ்வரி நன்றி கூறினார். கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.