தஞ்சாவூர், ஜன.22- குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து தஞ்சை, கும்பகோணம் மற்றும் பட்டுக் கோட்டை மையங்களில் மகாத்மாகாந்தி நினைவு தின மான ஜன.30 அன்று மாலை நேர தொடர் முழக்கப் போராடடம் நடத்துவது என அனைத்துக் கட்சி, இயக்கங்கள் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடி யுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பபு நட வடிக்கைகளை நடைமுறைப் படுத்திட மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனைக் கண்டித்து வரும் பிப்ரவரி 22 (சனிக்கிழமை) லட்சம் பேர் கைகோர்க்கும் மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை திட்டமிடும் ஆலோசனை கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.மனோகரன் தலைமை யில் நடைபெற்றது.
சிபிஐ மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி மற்றும் நிர்வாகி கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாநகரச் செயலாளர் ந.குருசாமி, தமிழர் தேசிய முன்னணி அய்ய னாபுரம் முருகேசன், மக்கள் அதி காரம் காளியப்பன், ராவணன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை இரா.அருணாசலம், கிருஸ்துவ நல்லிணக்க இயக்கம் பி.கே. பிரான்ஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எஸ்.எம்.ஜெய்னு லாபுதீன், தாளான்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு, ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் எஸ்.முகமது அப்பாஸ், ஏஐடியூசி நிர்வாகிகள் சி.சந்திரகுமார், ஆர்.தில்லைவனம், ஆர்.பி. முத்துகுமார் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள், அனைத்து அமைப்புகள், சமூக நல இயக்கங்கள் மற்றும் சிறு பான்மை நல அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், “மகாத்மாகாந்தி நினைவு தின மான ஜன.30 (வியாழன்) அன்று மாலை 4 மணிமுதல் 6 மணி வரை குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெ டுப்பபு நடவடிக்கைகளுக்கு எதி ராக மக்கள் ஒற்றுமையினை மையப்படுத்தி தஞ்சை, கும்ப கோணம் மற்றும் பட்டுகோட்டை மையங்களில் மாலை நேர தொடர் முழக்க போராட்டத்தினை நடத்து வது.
குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெ டுப்பு நடவடிக்கைகளுக்கு எதி ராக பிரச்சாரம் மற்றும் மனிதச் சங்கிலி போராட்டம் குறித்து திட்ட மிடவும், அமைப்புக் குழுக்களை ஏற்படுத்தவும் ஜன.23(வியா ழன்) அன்று கும்பகோணத்தி லும், ஜன.24 அன்று தஞ்சையி லும், ஜன.25 அன்று பட்டுக் கோட்டையிலும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், அனைத்து அமைப்புகள், சமூக நல இயக்கங் கள் மற்றும் சிறுபான்மை நல அமைப்புகளின் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி போராட்டத்தினை முன் னெடுப்பது. குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெ டுப்பு நடவடிக்கைகளை கைவிட மத்திய அரசை வலியுறுத்தியும், மாநில அரசு, அமுல்படுத்த மறுக்க வலியுறுத்தியும் தஞ்சை மாவட்ட மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பை தெரிவிக்கும் வகை யில் சாதி மதம் கடந்து லட்சம் பேர் கைகோர்க்கும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் பிப்ர வரி 22 (சனி) அன்று தஞ்சை மாவட்டத்தின் தென்கோடியான மல்லிப்பட்டினம் தொடங்கி அதி ராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள் வழியாக மாவட்டத்தின் வட கோடியான அணைக்கரை வரை 150 கி.மீ. மனித சங்கிலி போரா ட்டத்தை வெற்றிகரமாக நடத்து வது” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.