tamilnadu

14-வது ஆண்டாக தொடர்ந்து கொன்றைக்காடு அரசுப் பள்ளி சாதனை

தஞ்சாவூர், ஏப்.30-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி தொடர்ந்து 14-ஆவது ஆண்டாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ஹரிகரன் 460 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், மாணவி ரூபா 459 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தையும், மாணவி ஜோதிகா 440 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றார். 400 மதிப்பெண்களுக்கு மேல் 25 பேர் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், இதற்காக உழைத்த தலைமையாசிரியர் மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.கே.ராமமூர்த்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இப்பள்ளி தொடர்ந்து 14-ஆவது ஆண்டாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

;