tamilnadu

img

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தஞ்சாவூர், மே 3-அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷ் அறிவுறுத்தலின்படி, அப்பகுதி கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், மேற்பார்வையாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக இருப்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதில் 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உணவகங்களில் தடை செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தி பார்சல் கட்டுவதும், தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதும் குற்றத்திற்குரிய செயல் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

;