குடவாசல், ஜூலை 6- குடவாசல் அகர ஓகை வசிக்கும் திருவாரூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் எம்.ராஜமாணிக்கத்தின் மாமனார், மூத்த தோழர் பி.சாமிநாதன்(82)குடவாசல் ஒன்றியம் மேலப்பாலுர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக இவர் வெள்ளிக்கிழமை மாலை காலமானார். அன்னாரின் மறைவு செய்தியை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மறைந்த தோழர் சாமிநாதன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா, முன்னாள் பேரூராட்சித் தலைவர் டி.அய்யாறு மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், திருவாரூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தோழமை சங்கத்தினர், கட்சி தோழர்கள் சனிக்கிழமை மாலையில் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.