tamilnadu

img

தோழர் ஆர்.முத்துப்பெருமாள் இறுதி நிகழ்ச்சி சோகத்தில் ஆழ்ந்த சோழவித்தியாபுரம்

நாகப்பட்டினம், ஆக 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினர், சோழவித்தியாபுரம் தோழர் ஆர்.முத்துப்பெருமாள்(58) 31.07.2019,  புதன்கிழமை மதியம்-2.00 மணிக்குத்  தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனை யில் காலமானார். அவரது உடல் வியா ழக்கிழமை அன்று சோழவித்தியாபுரம், அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டது.வெள்ளிக்கிழமை காலை, அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநிலப் பொதுச் செயலாள ருமாகிய பெ.சண்முகம், மாவட்டச்செய லாளர் நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினர்கள்வி.மாரிமுத்து, ஐ.வி.நாகராஜன், மற்றும் பல்வேறு இயக்க ங்களின் தலைவர்கள் பலர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.  வெள்ளிக்கிழமை காலை-11 மணிக்கு, சி.பி.எம். கீழையூர்ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன் தலை மையில் புகழஞ்சலிக் கூட்டம் நடை பெற்றது. அ.ம.மு.க.சார்பில் துரை, சி.பி.ஐ.ஒன்றியச் செயலாளர் செல்வம், அதிமுக சார்பில் பாலை செல்வ ராஜ்,  தி.மு.க.சார்பில் மாநில இளை ஞரணிச்செயலாளர் இல.மேக நாதன், கீழையூர் ஊராட்சி ஒன்றிய ப்பெருந்தலைவர் மு.ப.ஞானசேகரன், குடும்ப உறவினர் கணபதி,சி.பி.எம்.சார்பில் மாதர் சங்க மாநிலத் துணைத் தலைவர்எஸ்.கலைச்செல்வி, வி.தொ.ச. மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், வி.தொ.ச.மாநிலப் பொதுச் செய லாளர் வி.அமிர்தலிங்கம், விவசா யிகள் சங்கமாநிலத் தலைவர் வி.சுப்பிர மணியன், திருவாரூர் மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி, நாகை மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகை மாலி, மாநிலக்குழு உறுப்பினரும் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, மாநிலச் செயற்குழு உறுப்பினரும் விவசாயிகள் சங்க  மாநிலப் பொதுச் செயலாளரு மாகிய பெ.சண்முகம் ஆகியோர் புகழ ஞ்சலி உரையாற்றினர். பெ.சண்முகம் பேசும்போது குறிப்பி  ட்டதாவது-“தோழர் ஆர்.முத்துப்பெரு மாள் மறைவு காலத்தால் ஈடு செய்ய முடியாதபேரிழப்பாகும். எப்போதும் கோபப்படாத சிரித்த முகம்.மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள்- விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், தலித் மற்றும் பிற்படுத்த ப்பட்ட மக்கள், ஏழை எளியவர்கள்உயர்வுக்காக 45 ஆண்டுக் காலம் போராடியவர். உயிரோடும் அவர் 55நாட்கள் போராடியவர். அனைவ ருக்கும் சேவை செய்தவர். அனை வரின்உள்ளங்களிலும் கலந்திருப்பவர்.  அதனால்தான், இன்று சோழவித்தியாபுரமே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது.சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வேலூர் நாடாளுமன்றத்தேர்தல் பிர ச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதால் நேரில் வந்து இறுதிமரியாதை செலுத்த இயலா ததைக் குறிப்பிட்டுத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்குமாறு கூறி யுள்ளார்“ இவ்வாறு பெ.சண்முகம் புகழுரையாற்றினார்.இறுதியில் அனை வரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.