tamilnadu

வாலிபர் சங்க புதிய கிளை துவக்க விழா

திருச்சிராப்பள்ளி, மார்ச் 4- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி கிழக்கு பகுதிக்குழு சார்பில் திங்கட்கிழமை சத்தியமூர்த்தி நகரில் புதிய கிளை துவக்க விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு கிளைத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் லெனின் சங்க கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் சுரேஷ், பகுதி செயலாளர் ரெட்டமலை, பகுதி தலைவர் ஷாஜகான், பகுதி பொருளாளர் விக்கி, பகுதி பொறுப்பாளர் பழனிவேல் ஆகியோர் பேசினர். கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கிளைப் பொருளாளர் சஞ்சய் நன்றி கூறினார். 

;