திருச்சிராப்பள்ளி, ஜூலை 24- பெண்ணுரிமை போ ராளியும், சுதந்திர போரா ட்ட தியாகியுமான கேப்டன் லெட்சுமி அம்மா நினைவு தினம் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டது.\
திருச்சிராப்பள்ளி
தா.பேட்டை ஒன்றியம் மேட்டுப்பாளையத்தில் மாதர் சங்கத் தலைவர் தேவி தலைமையில் கேப்டன் லட்சுமி படத்திற்கு மலர்மா லை செலுத்தி அஞ்சலி செலு த்தப்பட்டது. லால்குடி ஒன்றியம் மேலகிருஷ்ணா புரம் மற்றும் வடுகர்பேட்டை பகுதிகளிலும் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தப்ப ட்டது.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம் இராராமுத்திரைக் கோட்டையில், லெட்சுமி அம்மாளின் உருவப்பட த்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாதர் சங்க ஒன்றியக் குழு உறு ப்பினர் ஜி.வசந்தி தலைமை வகித்தார். தஞ்சை மாநகரம் பூக்காரத் தெருவில் மாதர் சங்கம் மாவட்ட பொரு ளாளர் இ.வசந்தி தலைமை யில் அஞ்சலி செலு த்தப்பட்டது.
நாகப்பட்டினம்
கீழையூர் ஒன்றியத்தில் திருக்குவளை அரசு மரு த்துவமனை முன்பு சங்க ஒன்றியச் செயலாளர் கே.டி. எம்.சுஜாதா தலைமை வகி த்தார்.பாலக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக, எம்.சித்ரா தலைமையிலும், திருப்பூண்டி அரசு மருத்து வமனை முன்பு ஆர்.மாலா தலைமை வகித்தார். கீழ்வேளூர் ஒன்றியம், தேவூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சங்க ஒன்றியத் தலைவர் ஆர்.வளர்மதி தலைமையிலும், சீர்காழி வட்டம் நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சங்க வட்டத் தலை வர் எஸ்.விசாலாட்சி தலை மையிலும், தரங்கம்பாடி வட்டம், திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலை யம் முன்பு சங்கத் தலைவர் சண்முகவள்ளி தலைமை யிலும், சங்கரன்பந்தல் ஆரம்ப சுகாதார நிலையம் முன் டி.ஆர்.ராணி தலை மையிலும் அஞ்சலி செலுத்த ப்பட்டது.