tamilnadu

img

தேவையற்ற பயணத்தை தவிர்த்திடுக!

பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, மார்ச்.20- புதுக்கோட்டை அரசு போக்கு வரத்துப் பணிமனையில் உள்ள பேருந்துகளில் கொரோனா தடுப்பு கிருமிநாசினி தெளிக்கும் பணியினை புதன்கிழமை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி செய்தியாளர்களிடம் தெரிவித்தது. மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. மாவட் டத்தில் உள்ள 9 போக்குவரத்து பணி மனைகளின் மூலம் 437 பேருந்துகள் இயக்கப்பட்டு தினமும் சராசரியாக 2.65 லட்சம் பேர் பயணிக்கின்றனர். தினமும் காலை மற்றும் இரவு வேலைகளில் போக்குவரத்து பணி மனைக்கு வரும் அனைத்து பேருந்து களும் முழுமையாக லைசால் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தவறாமல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறது. அனைத்து பேருந்து நிலை யங்களிலும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கைகழுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 31.03.2020 வரை ஜல்லி க்கட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளதுடன், பொது மக்கள் அதி கம் கூடும் இடங்களான திரையரங் கம், வணிக வளாகங்கள் தற்காலிக மாக மூடப்பட்டுள்ளது. பொது மக்கள் தன் சுத்தம் பேணி கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். 

மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை மூலம் குழுக் கள் அமைக்கப்பட்டு பொது மக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. பொது மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் தேவையற்ற பய ணத்தையும், பொது இடங்களில் கூடு வதையும் தவிர்க்க வேண்டும். யாருக் கேனும் நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்தவமனையை அணுக வேண் டும். எக்காரணத்தை முன்னிட்டும் சுயவைத்தியம் எடுத்துக்கொள்ளக் கூடாது. அனைத்து சுற்றுலா தளங்க ளையும் மூட அறிவுறுத்தப்பட்டுள் ளது என்றார்.

பொன்னமராவதி

பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் பொன்னமராவதி நகரத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் முன்பு மக்கள் கைகழுவ வசதியாக தண்ணீர், சோப்பு, துண்டு ஆகியவை கண்டிப்பாக வைக்க வேண்டு மென வருவாய் ஆய்வாளர் ஜோதி தலைமையில் வருவாய்த்துறையி னர் அனைத்து கடைகளுக்கும் சென்று அறிவுரை வழங்கினர். பொன்னமராவதி பேருந்து நிலை யத்தில் நடைபெற்ற கொரானா தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்பு ணர்வில் பேரூராட்சி செயல் அலு வலர் தனுஷ்கோடி தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் அருள் மணி நாகராஜ் கொரானா முன் தடுப்பு குறித்து விளக்கினார். பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட் டவைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.