தருமபுரி, ஆக.9- தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 32ஆவது அமைப்பு தின கொடியேற்றுவிழா மற்றும் பெயர் பலகை, கல்வெட்டு திறப்பு விழா வெள்ளியன்று தருமபுரி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த விழாவிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.பழனியம்மாள் தலைமை வகித் தார். நினைவு கல்வெட்டை மாநிலத் தலைவர் எம்.செளந்தரராஜன் திறந்து வைத்தார். பெயர்ப்பலகையை மாநிலப் பொருளாளர் சை.மு.சலீம் திறந்து வைத் தார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.கோவிந்தராசு கூட்டுறவு ஊழியர் சங்க கொடியை ஏற்றி வைத்தார். மேலும் அரசு ஊழியர் சங்க கொடியை மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் ஏற்றிவைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.புகழேந்தி, மாவட்ட மகளிர் அணி துணைக்குழு அமைப் பாளர் பி.எஸ்.இளவேனில், பட்டு வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் எம்.சிவப்பிரகாசம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ரூத்ரையன், நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாகுபேரன், பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் எம்.முனிராஜ், வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம்.யோகராசு, கூட்டு றவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.சி.குமார், மாவட்டப் பொருளாளர் கி.குமார், மாவட்ட துணைத் தலைவர் கீதா, பொன்மணி, மாவட்ட இணை செயலாளர்கள் ஜெயந்தி, விஜயக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.