தஞ்சாவூர், ஜூன் 26- பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்கம் தூய்மைப் பணியாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்த ரேவதி என்ற பெண்ணை, குப்பை அரைக்கும் இயந்திரப் பணிக்கு அனுப்பிய தால், அதற்கான பயிற்சியை, பாதுகாப்பு உப கரணமோ இல்லாத நிலையில், தவறுதலாக இயந்திரத்தில் சிக்கி, கை துண்டிக்கப்பட்டு ஆபத்தான நிலையில், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு காரணமான நகராட்சி ஆணை யர், பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர அரசுப் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் கண்டன உரை யாற்றினார். அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.கந்தசாமி முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.செல்வம், விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கம் சோம சுந்தரம், சக்திவேல், டாஸ்மாக் ஊழியர் சங்கம் வீரையன், உள்ளாட்சி ஊழியர் சங்கம் சின்னப் பிள்ளை, செல்வம், செல்லதுரை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.