தஞ்சாவூர், ஜூலை 13- சிஐடியு பொன் விழா ஆண்டு, தஞ்சாவூர் மாவட்ட 14-வது மாநாடு தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் பேரணியுடன் சனிக்கிழமை மாலை தொடங்கியது. வல்லம் பூமயில் கிராமியக் கலைக்குழு தப்பாட்டத்துடன், வாண வேடிக்கைகள் முழங்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில துணை பொதுச் செயலாளர் வி.குமார், சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால், மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ, வரவேற்புக்குழு தலைவர் இரா.புண்ணியமூர்த்தி மற்றும் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், சிஐடியு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.