tamilnadu

img

குடியுரிமை சட்ட எதிர்ப்பு பேரணி

திருத்துறைப்பூண்டி: குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை அமல்படுத்தாதே உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஒன்றிய நகர குழுக்கள் சார்பில் பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.  மன்னை சாலையிலுள்ள தோழர் பிஎஸ்ஆர் சிலையிலிருந்து பேரணி புறப்பட்டு அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நிறைவடைந்தது. பேரணியை மார்க்சிஸ்ட் கட்சி நகர குழு உறுப்பினரும், 13ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலருமான ஆசிரியர் கு.வேதரத்தினம் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் கே.பி ஜோதிபாசு தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், வாலிபர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஏ.கே. வேலவன், வழக்கறிஞர் சி. சிவசாகர், ஒன்றிய செயலாளர்கள் எம். சதீஷ், எம்.சரவணன், ஏ.கே. கலைவாணன், ஒன்றிய தலைவர்கள் கே.சீனிவாசன், சி.வீரசேகரன், மனிதநேய மக்கள் கட்சி மாநில  வழக்கறிஞர் அணி தீன் முகம்மது, எம்.சம்சுதீன், யாசின் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், வி.டி.கதிரேசன், மாணவர் சங்க மாநில துணை செயலாளர் ஆறு.பிரகாஷ் உள்ளிட்டோர் மற்றும் இஸ்லாமிய தோழர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.